டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சுயசரிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு

அவ்வை இல்லத்தின் நிறுவனர், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சுயசரிதை 1964 - ல் ஆங்கிலத்தில் முதலில் பிரசுரிக்கப்பட்டது. இந்த புத்தகம் டாக்டர் ரெட்டியின் பன்முக மற்றும் வளமான வாழ்க்கையின் உண்மையான பதிவு . டாக்டர் ரெட்டி எழுதிய இந்த நூலில் தனிநபர், குடும்பம், தொழில்முறை, அறிவியல், கல்வி, சமூகம், கலாசாரம், அரசியல் என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. ஒரு நபரின் கதை என்று விவரிக்கப்பட்டாலும், இந்த புத்தகம் ஆறு தசாப்தங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலப்பகுதியில் பரவிய நிகழ்வுகள், ஆளுமைகள், உறவுகள், நிறுவனங்கள் மற்றும் இயக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த முக்கியமான படைப்பின் தமிழ் மொழியாக்கம் 2012-13 ஆம் ஆண்டில் பேராசிரியர் எஸ்.ராஜலட்சுமி அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அவ்வை இல்லமும் எங்கள் அறக்கட்டளையும் இணைந்து Cre-A பதிப்பகங்களின் ஆதரவுடன் 30 ஜூலை 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

Go Back